தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார் இணை செயலாளர் துரைக்கண்ணு முன்னிலை வகித்தாள் திருச்சி பெரம்பலூர் அரியலூர் தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு சங்க பணியாளர்கள் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 போராட்டத்தின் போது பல்நோக்கு சேவை மையம் உட்கமைப்பு நிதி மற்றும் ஏ ஐ எஃப் திட்டத்தை கட்டாயப்படுத்தி அமல்படுத்துவதை கைவிட வேண்டும் ஊதிய ஒப்பந்தம் குறித்து அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கையை விரைவில் பெற்று ஊதிய உயர்வு உடனடியாக அறிவிக்க வேண்டும் காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *