திருச்சி சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட், உத்தமர்கோவில் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி நளினிவசந்தா வயது 73 இன்று காலை தனது வீட்டின் அருகே உள்ள ரேஷன் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் ரேஷன் கடைக்கு ஸ்கூட்டரில் அழைத்துச்செல்வதாக கூறி உதவி செய்வதுபோல் நாடகமாடியுள்ளார். இதனை நம்பிய மூதாட்டி ஸ்கூட்டரில் ஏறி சென்றுள்ளார்.

சிறிது தூரம் சென்றதும் வழியில் நின்ற மற்றொரு மர்ம நபர் சட்டென்று ஸ்கூட்டரில் மூதாட்டியின் பின்னால் அமர்ந்ததும் ஸ்கூட்டர் சேலம் சாலையில் உத்தமர்கோவில் ரயில்வே மேம்பாலத்தில் ராக்கெட்போல் பறந்துள்ளது. சுதாரித்துகொண்ட மூதாட்டி காப்பாற்றுங்கள்…. காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டும் யாருடைய செவிக்கும் எட்டவில்லை.2 கிலோமீட்டர் தூரம் ஸ்கூட்டரில் மூதாட்டியை கடத்தி சென்ற மர்ம நபர்கள் யாரும் இல்லாத இடத்தில் ஸ்கூட்டரை நிறுத்தி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துவிட்டு அவரை சாலையோரத்தில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் மூதாட்டியை ஏமாற்றி கடத்திச்சென்று செயினை பறித்து கொண்டு சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்