திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் முன்னேற்ற கழகம் மற்றும் திருச்சி ஜில்லா நாயுடு மகாஜன சங்கம் சார்பில் 27 வது மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் திருச்சி இ.பி சாலையில் உள்ள ஜில்லா நாயுடு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. ஜூனியர், சப் – ஜூனியர், இளைஞர், ஆண்கள், பெண்கள், மாஸ்டர், கேடட், மினிகேடட் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் மேஜர் பொன் ரத்தினம், செயலாளர் சுகுமாரன், துணை தலைவர் குமரன் மற்றும் ஜில்லா நாயுடு மகாஜன சங்க தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு நாளை பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்