திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக வட மாநிலத்தவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்தார் அவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த வட மாநிலத்தவரிடம் விசாரணை செய்ததில் அவர் உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர் மாவட்டம், கேசவப்பர் பகுதியைச் சேர்ந்த 51 வயதான கரம் பட்டு என தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடமிருந்து 4 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் ஸ்கூட்டி வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் குட்கா பொருள்கள் எப்படி வந்தது? எங்கு கடத்திச் செல்கிறார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *