தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாள் விழா இன்று தமிழக முழுவதும் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் உறையூர் வெக்காளியம்மன் திருக்கோவிலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி மாநகர் மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல் வளர்மதி ஆகியோர் தங்கத்தேர் இழுத்தனர். இந்நிகழ்வில்  திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் மற்றும் திருச்சி அதிமுக மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்