திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் பிலால் இவர் கடந்த 13ஆம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவர் தனது இரு சக்கர வாகனத்தை வழக்கம்போல் தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து வேலைக்கு செல்வதற்காக வெளியே வந்து பார்த்த போது வீட்டின் முன் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனம் காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்தார் ‌

உடனடியாக தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த வீடியோக்களை பார்த்தபோது இரு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து தனது இருசக்கர வாகனத்தை திருடுவது பதிவாகி இருந்தது. உடனடியாக இதுகுறித்து திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனது வீட்டில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறையிடம் ஒப்படைத்தார் அந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் வாலிபர்கள் குறித்து திருச்சி தில்லைநகர் போலீசார் தீவிரவிசாரனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்