திருச்சி ரோட்டரி சங்கம் மற்றும் ஹேக்கர்ஸ் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த போதை பழக்கத்திற்கு எதிரான ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியானது திருச்சியில் துவங்கி சென்னையில் நிறைவடைகிறது. மேலும் இந்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியில் மூன்றரை வயது முதல் 28 வயது வரை உள்ள 70 ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த 3-நாள் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், செங்கல்பட்டு, அம்பத்தூர் வழியாக சென்று சென்னையில் நிறைவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்