திருச்சி மாவட்ட மருத்துவம், ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறை சார்பாக உலக மக்கள் தொகை தினம் 2024 விழிப்புணர்வு பேரணியானது திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் இருந்து பரமசிவன், இணை இயக்குநர் நலப்பணிகள் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. பேரணியில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி, வெஸ்ட்ரி பள்ளி, பெரியார் மருந்தியல் கல்லூரி, CSI செவிலியர் கல்லூரி, Child Jesus செவிலியர் கல்லூரி மற்றும் கலைக்காவேரி நுண்கலை கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஜேம்ஸ் பள்ளி மாணவர்கள் பேண்டு வாத்திய குழு இசையோடு பேரணி நடைபெற்றது.

மேலும், உலக மக்கள்தொகை தின கருத்தரங்கமானது கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் மருத்துவம், ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறை துணை இயக்குநர் சுபிலா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) அர்ஷியா பேகம், MD., மருத்துவமனை திட்ட அலுவலர் மருத்துவர் காயத்ரி தேவி, மாவட்ட காசநோய் அலுவலர் மருத்துவர் சாவித்திரி. மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை துறைத்தலைவர் உமாமோகன்ராஜ், கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி முதுநிலை உதவி பேராசிரியர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குடும்ப நலத்துறை மக்கள் கல்வி தகவல் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) நிக்கோலஸ் ராஜா செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்