திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த விமானங்களில் பயணிக்க கூடிய பயணிகள் பலரிடமிருந்து கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. இதில் வந்த விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது ஆண் பயணி ஒருவர் தனது பேண்டில் மறைத்து வைத்திருந்த, ரூபாய் 27,02,520 மதிப்புள்ள, 360 கிராம் தங்கச் செயின் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோன்று அதே விமானத்தில் பயணித்து வந்த, மற்றொரு ஆண் பயணி ஒருவர் ரூ. 51,19,774 மதிப்புள்ள, 682 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வகையில், திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில், ரூ. 78,22,294 மதிப்புள்ள, 1042 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடத்தலில் ஈடுபட்ட பயணிகள் இருவரிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *