அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வருமான முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்கவும், அதிமுக கழக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி MLA அறிவுறுத்தலின்படி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கழகம் சார்பில் தில்லைநகர் பகுதிக்கு உட்பட்ட தென்னூர் அரச மரத்தடி பஸ்ஸ்டாப் அருகில்

திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்பியுமான ரத்தினவேல் ஆகியோர் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், அதிமுக நிர்வாகி எனர்ஜி அப்துல் ரகுமான் மற்றும் அதிமுக மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்