தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் திமுக அரசின் மின் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் சரி வர வழங்காததை கண்டித்தும் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தேமுதிக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் தேமுதிகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் இராகவ் பிரகாஷ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- தொடர்ந்து திமுக அரசு மூன்றாவது முறையாக மின் கட்டண உயர்வை உயர்த்தி உள்ளது இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேஷன் கடைகளில் அரிசி பாமாயில் உள்ளிட்ட உணவு பொருட்கள் சரி வர வழங்கப்படுவதில்லை மேலும் கர்நாடகா அரசு நீர் திறந்து விடாமல் இருக்கிறது இதை வன்மையாக கண்டிக்கிறோம், நெய் கொண்டு உண்பவருக்கு வீட்டில் இருக்கும் எண்ணெயை பற்றி என்ன தெரியும் என்று நக்கலாக முரசொலியில் கட்டுரை எழுதினார் அதை பதிலை இப்போது கடனாக இதே பதிலை நான் சொல்கிறேன் ஏழை மக்களை பற்றி நீங்கள் சிந்திப்பது உண்டா? என்று கேள்வி எழுப்பினார், இதனைத் தொடர்ந்து திமுக அரசை கண்டித்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்