திருச்சி புனித தூய வளனார் கல்லூரியில் கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை இந்த கல்லூரியில் பொருளாதாரம் கணிதம் வேதியல் போன்ற படிப்புகள் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சி புனித தூயவள நாள் கல்லூரியில் பயின்று தொழில் குடும்பம் என பிரிந்து சென்று 60வது வயதை கடந்த பிறகு இன்று முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து கொண்டு தங்கள் வாழ்நாளில் நடந்த இனிமையான நிகழ்வுகள் கல்லூரி காலங்களில் நடந்த பொன்னான நிகழ்வுகளை குறித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து உரையாடினர். இந்த நிகழ்வில் புனித தூய வளனார் கல்லூரி முதல்வர் துணை முதல்வர் பேராசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *