ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது இந்த மோதலை தடுப்பதற்காக வகுப்பு ஆசிரியரான சிவக்குமார் என்பவர் மாணவர்களை சமரசம் செய்ய முற்பட்டார் அப்போது மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் ஒரு மாணவர் அருகில் இருந்த அரிவாளை எடுத்து ஆசிரியர் சிவகுமாரின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது இதில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்த ஆசிரியரியரை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மோதலால் சில மாணவர்கள் காயம் அடைந்தனர்

அதில் ஒரு மாணவர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பள்ளி மாணவன் ஒருவர் அறிவாளால் ஆசிரியர் வெட்டி சம்பவம் ஸ்ரீரங்கம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது மேலும் தகவல் அறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *