திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மலைக்கோட்டை பகுதி சார்பில் இ.பி ரோடு சத்திய மூர்த்தி நகரில் அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் வரவேற்று பேசினார். மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். அமைப்பு செயலாளர் ரத்தினவேல் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.

இதில்,மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி. பரமசிவம், மாவட்ட துணைச் செயலாளர் பத்மநாதன், பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள், எம்ஜிஆர் மன்றம் கலீல் ரஹ்மான், ஐ.டி. பிரிவு வெங்கட்பிரபு, பகுதிச் செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி , எம்.ஆர்.ஆர். முஸ்தபா,புத்தூர் ராஜேந்திரன், கலைவாணன், ரோஜர் ,திருச்சி மாநகர் மாவட்டஜெயலலிதா பேரவை தலைவர், கவுன்சிலர் அம்பிகாபதி, முன்னாள் கோட்டத் தலைவர் மனோகரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்