அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் சார்பில் 24வது மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது.அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார்.தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே என் நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாநாட்டு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;- தமிழக அரசு 40க்கு மேற்பட்ட நல வாரியங்களை செயல்படுத்தி வருகிறது.சித்த மருத்துவர் நல வாரியம் அமைக்க தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன்.

இதன் மூலம் மருத்துவ உதவி கல்வி உதவி போன்ற பல நலத்திட்டங்களை சித்த மருத்துவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாநகராட்சி மேயர். அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர், வைரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் நடைபெற்ற மாநாட்டில் பழனியில் சித்த மருத்துவ கல்லூரி, பாளையங்கோட்டையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுத்து சித்த மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 42 லட்சம் நிதி ஒதுக்கீடுசெய்தமைக்கும், மேலும் சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து வரும் தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சித்த மருத்துவ நல வாரியத்தை தொடங்கி பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும்,

 சித்த மருத்துவர்களின் கண்டு பிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கவும் ஆவன செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்கவும், அக்குபஞ்சர் கவுன்சில் ஆரம்பிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் டாக்டர்கள் ஹரிராமன், மற்றும் தமிழகமெங்கும் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக டாக்டர் தமிழரசி சுப்பையா வரவேற்றுப் பேசினார். டாக்டர் விஜய் கார்த்திக் நன்றி உரை கூறினார். நிகழ்ச்சியில் சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *