திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள எஸ் கள்ளுக்குடியில் புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரம் அமைந்துள்ளது விநாயகர் கோவில். இந்நிலையில் கடந்த மாதம் 11ம் தேதி பட்ட பகலில் 16 வயது மதிக்கத்தக்க மூன்று சிறுவர்கள் விநாயகர் சிலையை கடப்பாரை கொண்டு பெயர்த்து திருடி செல்ல முயன்றனர். இதனை கவனித்த கிராம மக்கள் கூச்சலிட அச்சிறுவர்கள் சுவாமி சிலையை அங்கேயே விட்டுவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர் .

உடனடியாக கிராம மக்கள் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இந்நிலையில் விநாயகர் சிலையை மறு பிரதிஷ்டை செய்ய வேண்டும் என கோவில் பூசாரி சோமசுந்தரம் தெரிவித்த நிலையில் கிராம தலைவர் ரமேஷ் இதற்கான ஏற்பாடுகளை செய்து இன்று சிறப்பு யாகத்தினை ராகவன் குருக்கள் நடத்தி விநாயகர் சிலை மறு பிரதிஷ்டை செய்தார். தொடர்ந்து ஊர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *