திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற பொது தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற இலக்கை நோக்கி திருச்சி திமுக தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக இரண்டாவது பொது உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி காவேரி பாலம் சிந்தாமணி அருகில் உள்ள தேசிய பள்ளி மைதானத்தில் அமைக்கப் பட்டுள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகரக் கழக செயலாளர் மதிவாணன் வரவேற்புரையாற்றிட மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கழக முதன்மை செயலாளரும் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன் சேகரன், சபியுல்லா கவிஞர் சல்மா செந்தில் திவ்யா மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன் லீலாவேலு குணசேகரன் பகுதி கழகச் செயலாளர் மோகன் நன்றியுரை மாவட்ட துணைச் செயலாளர் மூக்கன் ஆகியோர் உரை ஆற்றினார். மற்றும் கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள்- நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *