திருச்சி பிள்ளைமாநகர் மதுரை வீரன் கோவில் தெருவில் அமைந்து அருள் பாலித்து வரும் காவல் தெய்வமான ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி ஸ்ரீ வெள்ளையம்மாள் ஸ்ரீ பொம்மி அம்மாள் ஸ்ரீ மகா மாரியம்மன் ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு புனராவர்த்தன ஜீர்ணோத்தாரன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

முன்னதாக ஆறாம் தேதி காவேரி ஆற்றில் இருந்து புனித நீர் பக்தர்களால் கொண்டுவரப்பட்டு கணபதி பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஏழாம் தேதி இரண்டாம் காலையாக சாலை பூஜை நடைபெற்றது மேலும் அனைத்து தெய்வங்களுக்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து எட்டாம் தேதி ஆன இன்று காலை 9 மணி அளவில் யாகசாலையில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் இளைஞர் அணியினர் பிள்ளைமா நகர் கிராம நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *