ஜமா அத்தே இஸ்லாமிய ஹிந்து அமைப்பின் மகளிர் அணி சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் தலைமையில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது, ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்து அமைப்பின் சார்பில் ஒழுக்கமே சுதந்திரம் எனும் மையக்கருத்தில் செப்டம்பர் ஒன்னாம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர், ஒழுக்கமே சுதந்திரம் என்னும் தலைப்பில்.மது மாது சூது உள்ளிட்டவைகளால் சீரழிந்து வரும் சமூகத்தை சீர்திருத்திட, மது அருந்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஆடை அலங்காரத்தால் ஏற்படும் சமூக சீர்கேடுகள்.

 இவைகளின் பாதிப்புகள் என்னென்ன என்பதையும் புரிந்து கொள்ளும் வகையில் துண்டு பிரசுரங்கள். கொடுத்தும் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் நடைபெற்ற மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியில்சிறப்பு விருந்தினர்களாக .என். ஆர்.ஐ ஏ எஸ்.அகாடமியின் இயக்குனர் விஜயா லயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர், இதில் தலைமை தபால் நிலையம் முதல் மேலப்புதூர் வரை மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்து மகளிர் அணியைச்சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள்உள்ளிட்டவர்கள் ஏராளமான பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் மக்கள் தொடர்புச் செயலாளர் நவாஸ்கான் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *