தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி பெரியாரின் கருத்துகளைப் பலரும் பகிர்ந்து அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். மேலும் பெரியாரின் பிறந்தநாளில் அவர் வலியுறுத்திய பெண் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதி பாதையில் பயணிப்போம்’ என உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக மகளிர் அணி சார்பில் திருச்சி மகளிர் அணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி புவனேஸ்வரி நிர்வாகி கீதா ராமநாதன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஆகியோர் தந்தை பெரியாரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *