அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவரும் பாரத ரத்னா டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி அதிமுக கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள குறத்தெருவில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு உறையூர் பகுதி கழக செயலாளர் பூபதி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளர் காந்தி முன்னாள் துணை மேறும் மாவட்ட கழக செயலாளருமான சீனிவாசன் கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் தலைமை கழக பேச்சாளர் கோவை புரட்சித்தம்பி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் அரவிந்தன் மாவட்ட கழக இணை செயலாளர் ஜாக்குலின் துணை செயலாளர் வனிதா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக் மாவட்ட ஐடி விங் செயலாளர் வெங்கட் பிரபு மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தப் பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்