திருச்சி திருவானைக்கோவில் கொள்ளிடம் செக் போஸ்ட் பகுதியில் வசித்து வருபவர் லதா இவரது கணவர் நாராயணன் இவர்கள் சலவைத் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை புகார் மனு ஒன்றை அளிக்க வந்தனர் அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- திருச்சி திருவானைக்கோவில் கொள்ளிடம் செக்போஸ்ட் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கணவர் நாராயணன் மகன் மற்றும் மருமகள் பேரக்குழந்தை மற்றும் இவரது சகோதரியின் குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வருகிறேன். மேலும் எனது தகப்பனார் பழனிச்சாமி என்பவர் கடந்த 1973 ஆம் வருடத்தில் சலவை தொழிலாளர் சங்கத்தில் தலைவராக பொறுப்பு வகித்த போது சொந்தமாக வாங்கியதாக கூறப்படும் இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கூரை வீட்டில் வசித்து வருகிறோம்.

இந்நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அதிகமானதால் கூரை வீட்டை இடித்து விட்டு கெட்டி மெத்தை வீடு கட்டுவதென முடிவெடுத்து வீட்டை தற்போது கட்டி வருகிறோம் இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் எங்களை சொந்த வீடு கட்ட விடாமல் தொடர்ந்து பிரச்சனை செய்து எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம், ஆனால் ஸ்ரீரங்கம் திமுக நிர்வாகியின் தலையிட்டால் போலீசார் தொடர்ந்து எதிராளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் இது குறித்து முதல்வரின் தனிபிரிவுக்கும், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் போலீஸ் கமிஷனர் அவர்கள் உரிய விசாரணை நடத்தி நாங்கள் வீடு கட்டுவதற்கு பாதுகாப்பும் எங்கள் உயிருக்கு பாதுகாப்பும் அளிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்