திருச்சி கேர் அகாடமியின் வடக்கு ஆண்டாள் தெரு மையத்தில் நடைபெற்ற இந்த சிகரம் நோக்கி விழாவிற்கு மைய இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ் செல்வன் தலைமை வகித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தேர்வாணையத்தின் இளநிலை பட்டதாரித் தேர்வில் இந்த மையத்தில் படித்து வெற்றி பெற்றவர்கள், இந்த மையத்தில் படித்து நீட் தேர்வில் வென்று அரசு மருத்துவ கல்லூரியில் சேர இருக்கின்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவாகவும், இந்த ஆண்டு நடைபெற இருக்கின்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான PG-TRB 2024, நீட் தேர்வு 2025 இதனை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாகவும் இந்த விழா நடத்தப்பட்டது.

இவ்விழாவில் Dr.இளந்தமிழன் வரவேற்புரையாற்றினார். Dr.ஆனந்த கிருஷ்ணன், திருமதி. கிருஷ்ணவேணி, Dr. தமிழன்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர், இலக்கியவாதி, பட்டிமன்ற பேச்சாளர் திருமதி. பாரதி பாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, “சாமானியனாலும் சாதிக்க முடியும். தன்னம்பிக்கை, தன் மேல் பிறர் வைக்கும் நம்பிக்கை இவற்றை ஆதாரமாக கொண்டு வெற்றி பெற வேண்டும்” என சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் கேர் அகாடமியில் படித்து அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர இருக்கின்ற இரண்டு மாநில சாதனையாளர்கள் உட்பட 23 மாணவர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர இருக்கின்ற 31 ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிறைவாக இயற்பியல் ஆசிரியர் ரிஷிகேசவன் நன்றி கூறினார். இவ்விழாவில் ஏராளமான மாணவர்கள் அவர்தம் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்