சிவசக்தி அகடாமி மற்றும் அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக் நிறுவனத்தின் சார்பில் தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி மற்றும் மாணவர்களுக்கிடையான போட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்க திருமண மண்டப வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த அறிவியல் கண்காட்சியில் திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்களின் கண்டுபிடிப்புகளான சென்சார் கருவி மூலம் வாகன விபத்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முறையும், இஸ்ரோ ஏவுதல மாதிரியும், சென்சார் கருவி மூலம் தீ தடுப்பு குறித்த முறைகளையும், சூரிய சக்தி மூலம் நவீன முறையில் உணவு பதார்த்தங்களை சூடு செய்வது குறித்தும், இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களை எவ்வித முறையில் காப்பாற்றுவது என்பது குறித்த பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்