பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் துவாக்குடி மண்டல தலைவர் விஜய் ஆனந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன் மற்றும் நிர்வாகி கார்த்திகை ஜோதி ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வார்டு 12ல் உய்யக்கொண்டான் வாய்க்கால் உள்ளது இந்த உய்யக் கொண்டான் வாய்க்கால் கரையை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து வியாபார கடை கட்டுகின்றனர் இந்த வியாபார கடை வைப்பதால் அருகில் சுடுகாடு உள்ளது கழிவறை உள்ளது இதனால் மிகவும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது இந்த ஆக்கிரமிப்பை செய்தவர்கள் தமிழ்நாடு ஆளுங் கட்சியினர். ஆகையால் மாவட்ட ஆட்சியர் இந்த ஆக்கிரமிப்பை அகற்றி இந்த இடத்தை ஈமச்சடங்கு செய்வதற்கு குளியல் தொட்டி அமைத்து தருமாறு துவாக்குடி நகராட்சி பரிந்துரை செய்த தருமாறும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்