அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53- ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு  கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க. கழக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகில் அதிமுக கழக 53 -ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் O.S.மணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . மேலும் கழக செய்தி தொடர்பாளர் ஜவஹர் அலி, திருச்சி அதிமுக மாநகர் மாவட்டக் கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் அதிமுக  மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட மகளிர் அணி துணை தலைவி புவனேஸ்வரி, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி சபீனாபேகம் மீரான் மாவட்ட மகளிர் அணி தலைவி ஆரோக்கிய மேரி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தில்லை நகர் பகுதி செயலாளர் எம் ஆர் முஸ்தபா செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்