2024 ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அறிவிப்பின் படி பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.50,000/மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 500 இணைகளுக்கு திருக்கோயில் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. , இந்த ஆண்டு கூடுதலாக மேலும் 100 இணைகளை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 இணைகள் வீதம் 600 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக திருமண விழா நடத்தி வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டார்.

 இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் இன்று திருச்சி மாவட்டம் சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் திருச்சி இணை ஆணையர் மண்டலத்திற்கு உட்டபட்ட (திருச்சி மற்றும் பெரம்பலூர்) மாவட்டத்தைச் சேர்ந்த 29 இணைகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் அருண் நேரு, கலந்துகொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர்கள் திருச்சி மற்றும் லால்குடி வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மணமக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்