தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (22.10.2024) நாமக்கல் மாவட்டம், பொம்மைகுட்டைமேட்டில் நடைபெற்ற அரசு விழாவில், 298 கோடியே 2 இலட்சம் ரூபாய் செலவில் 134 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 365 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 140 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 16,031 பயனாளிகளுக்கு 146 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சாலை மார்க்கமாக சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர் கே என் நேரு பெரம்பலூர் எம்பி கேஎன் அருண்நேரு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் போலீஸ் கமிஷனர் காமினி மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் சரவணன் எம்எல்ஏக்கள் பழனியாண்டி, கதிரவன், சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்