புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி மாஃபியாக்களால் நடைபெறும் கனிமவள கொள்ளையை எதிர்த்து தொடர்ச்சியாக போராடி வந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலையை கண்டித்தும், படுகொலை செய்தவர்களை கடுமையாக தண்டனை வழங்க கோரியும், உயிரிழந்த ஜகபர் அலி குடும்பத்தாருக்கு தமிழக அரசு 50 லட்சம் நஷ்ட ஈடு தமிழக அரசு வழங்க கோரியும், அவரின் குடும்பத்தின் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் பிச்சைக் கனி முன்னிலை வகித்தார், மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சித்திக் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் அபுபக்கர் சித்திக் கலந்துக் கொண்டு சமூக ஆர்வலர் ஜகபர் அலிக்கு நீதி வேண்டி கண்டன எழுச்சி உரையாற்றினார். வர்த்தகர் அணி மாவட்ட பொருளாளர் இப்ராஹிம் மற்றும் SDTU தொழிற்சங்க ஊடக அணி நிர்வாகி சலீம் ஆகியோர்கள் கண்டன கோஷம் எழுப்பினார்கள். மேலும் மாவட்ட துணைத் தலைவர் தளபதி அப்பாஸ் கண்டன உரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் நிகழ்வை மாவட்ட செயலாளர் மதர் ஜமால் முகமது தொகுத்து வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிராஜ்,கிழக்கு தொகுதி தலைவர் சபியுல்லா, மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா, திருவரம்பூர் தொகுதி தலைவர் ஷேக் முகமது, ஸ்ரீரங்கம் தொகுதி தலைவர் முகமது யாசிர், மணப்பாறை தொகுதி தலைவர் முகமது கோயா, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் தௌலத் நிஷா, SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா, செயலாளர் சர்க்கரை மீரான்,வர்த்தகர் அணி தலைவர் Dr.பக்ருதீன்,சுற்றுச் சூழல் அணி தலைவர் ரஹ்மத்துல்லா,தொண்டரணி மாவட்ட தலைவர் முகமது ஆரிப், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் உபைதுர் ரஹ்மான், மண்டல பொறுப்பாளர் ரியாஸ், இறுதியாக மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்