அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில், என்எஸ்பி ரோடு அருகே, கழக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்துக் கூறும் விதமாக துண்டு பிரசுரங்கள் விநியோகித்து திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் கலந்து கொண்டு கழக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.முன்னதாக மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு என்எஸ்பி ரோடு, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

இந்நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் அரவிந்தன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், ராஜேந்திரன், எம்.ஆர்.ஆர் முஸ்தபா, கலைவாணன் , கலிலுல் ரகுமான், நாகநாதர் பாண்டி, ரோஜர், ஏர்போர்ட் விஜி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்