மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா இன்று தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, அதிமுக தலைவர்கள், ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதே போல், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் இன்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக மகளிர் அணி மற்றும் வழக்கினர் அணி பிரிவு சார்பில் திருச்சி அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், மாவட்ட இணைச் செயலாளர் வழக்கறிஞர் முல்லை சுரேஷ்,

திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் சசிகுமார், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயராமன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட மகளிர் அணி துணை தலைவி சபீனாபேகம் மீரான், மாவட்ட மகளிர் அணி தலைவி ஆரோக்கிய மேரி மற்றும் மகளிர் அணியினர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *