திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இன்று மதியம் சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக குருவாயூர் செல்லும் அதிவிரைவு வண்டியில் (16127) ரயில்வே இருப்புப் பாதை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா ,ரேஷன் அரிசி தொடர்பாக GRP மற்றும் RPF இணைந்து சோதனை செய்ததில் பின்புற பொது பெட்டியில் சுமார் 12.5 கிலோ கிராம் கஞ்சாவை குற்றவாளி மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஷக்கில் ஷேக், என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்டு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு, திருச்சி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.