திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குழுமணி அக்ரஹார பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஐயமங்கள ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி பீடத்தின் நூதன ஆலய அருள்மிகு ஸ்ரீ வலம்புரி சக்தி கணபதி அஷ்டபந்தன பிரதிஷ்டை மற்றும் அருள்மிகு ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் பால ஸ்தாபனம் இன்று நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீ பகவத் பிரார்த்தனை யஜமான ஸங்கல்பம், புண்யாஹ வாசனம் ம்ருத்ஸங் க்ருஹணம், அங்குதார்பணம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை, கும்ப பூஜை, ரக்ஷபந்தனம், சயனாதிவானம், ஹெளத்ரம், ப்ரதான ஹோமம் மற்றும் தீபாராதனை யுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை புண்யா ஹாவாசனம், கோபூஜை கால சாந்தி திருவாராதனம், பிரதான ஹோமங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு ஸ்ரீ வலம்புரி சக்தி கணபதி அஷ்டபந்தன மகா பிரதிஷ்டை, ஸ்ரீ ஆஞ்சநேயர் பாலஸ்தாபனம் நடைபெற்றது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தாபகர் தெய்வயக்ஞர் மந்திரமூர்த்தி குருஜி கல்யாண ராமா பட்டாசிய சுவாமிகள் மற்றும் குழுமணி கிராம பக்த மஹாஜனங்கள் ஸ்ரீ ஐயமங்கல ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி பக்தி குழுவினர் செய்திருந்தனர். மேலும் விழாவில் பங்கேற்ற பக்த கோடிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.