விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் *மதசார்பின்மை காப்போம்* பேரணி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே இன்று தொடங்கியது. இந்தப் பேரணியானது டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து புறப்பட்டு குட்ஷெட் ரயில்வே மேம்பாலம், தலைமை தபால் நிலையம், ஒத்தக்கடை வழியாக சாம்பியன் மேல்நிலைப்பள்ளி அருகில் முடிவடைந்தது. பேரணி முடிவில் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் எழுச்சி உரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்பி, பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன் எம்எல்ஏ, முதன்மைச் செயலாளர் ஏ.சி.பாவரசு, தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், மாநில செய்தி தொடர்பாளர் கு.கா.பாவலன் துணைப் பொதுச் செயலாளர்கள் வன்னிஅரசு, எஸ் எஸ் பாலாஜி எம்எல்ஏ, ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ, பனையூர்பாபு எம்.எல்.ஏ, சிதம்பரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் இரா.கிட்டு, திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலத் துணைச் செயலாளர் கவுன்சிலருமான பிரபாகரன், திருச்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ் கனியமுதன் ,சக்திஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், குரு அன்புச்செல்வன், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இப்பேரணியில் தமிழகம் முழுவதும் உள்ள விடுதலை சிறுத்தைகளின் மாநில . மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், மகளிர் அமைப்புக்கள், இஸ்லாமிய ஜனநாயக பேரவையினர்,  தொழிலாளர் அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்பு சேர்ந்தவர்களும், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் இப்பேரணியில் பங்கேற்றனர். முன்னதாக இந்த பேரணியில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் வகையில் பேரணியின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலும் 3 அலங்கார ஊர்திகள் இப்பேரணியில் சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *