திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் திருச்சி சரஸ்வதி நடராஜன் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்த இலவச கண் பரிசோதனை முகாமை ஐயப்பா சேவா சங்க போசகர் முரளி மற்றும் வழக்கறிஞர் சுதர்சன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த முகாமில் சங்க செயலாளர் அம்சராம் வரவேற்புரை ஆற்றிட, சங்கத் தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். இந்த மருத்துவ முகாமில் உயர்தர லேசர் கண் புற அறுவை சிகிச்சை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது மேலும் குழந்தைகளுக்கான கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்து கொண்டனர். இந்நிகழ்வில் ரமேஷ்பாபு, வரதாச்சாரி, தேவ் சரவணன், மதன், வினோத், வெங்கடேசன், ராமன், சீனிவாசன், வினோத் கண்ணா, கார்த்தி, மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *