முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்விற்காக நேற்று தஞ்சாவூர் வருகை தந்தார் இரண்டு நாள் கலாய்வை முடித்துவிட்டு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி வந்தார். திருச்சி வந்த முதல்வர் மு க ஸ்டாலின் மிளகு பாறைக்கு வருகை தந்தார். மிளகு பாறையில் அரசு ஆதிதிராவிட நலப் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்து நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று கிளாட் தேர்வில் ராகினி என்கிற மாணவி வெற்றி பெற்றுள்ளார். அந்த மாணவியை முதல்வர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு பொன்னாடை அணிவித்து பேனா ஒன்றையும் முதல்வர் பரிசளித்தார். தொடர்ந்து சிறந்து கல்வி கற்க வேண்டும் என வாழ்த்து கூறி சென்றார்.

 முதல்வர் நேரடியாக வந்து தனக்கு வாழ்த்து கூறியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று கிளாட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன் அதற்கு என்னுடைய ஆசிரியர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் என பலர் உறுதுணையாக இருந்தார்கள். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், நான் முதல்வன் திட்டத்தை கொண்டு வந்த அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த மாணவி கூறினார். அதே போல அந்த மாணவியின் தந்தை தயாளன் மற்றும் அவருடைய பாட்டி நல்லம்மாளும் முதல்வர் நேரில் தங்களுடைய மகளை வந்து சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் இது போன்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த தமிழக அரசிற்கும் நன்றி தெரிவித்து கொண்டனர். மாணவி ராகினி சிறு வயதிலேயே தாயை இழந்தவர் அவருடைய தந்தை தயாளன் ஹோட்டல் ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார். அவரின் பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வரும் மாணவி ராகினி செவித்திறன் குறைபாடு உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்