அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்கி திருச்சி மாநகர்,மாவட்ட ஜெயலலிதா பேரவை ஏற்பாட்டில் திருச்சி பெரிய கடைவீதி பைரவர் கோவில் பகுதியில் உள்ளபெரிய கம்மாள தெரு வியபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்து வியாபாரிகள், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் வரகனேரி சசிகுமார், வழக்கறிஞர் இணை செயலாளர்கள் முல்லை சுரேஷ், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, நிர்வாகிகள் அய்யப்பன், வனிதா, சகாபுதீன், ஏடிபி ராஜேந்திரன், நசிமா பாரிக், கலீலுல் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்