கட்டுமான பொறியர், தொழிலதிபர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், முனைவர் விக்ரம கர்ண பழுவேட்டரையர் எழுதிய உய்யங்கொண்டான் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள ரெட்ஃபாக்ஸ் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ் இயக்க திருச்சி மாவட்ட தலைவர் அசோகன் வரவேற்புரை ஆற்றினார் தலைமை விருந்தினர்களாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன் நம்மாழ்வார் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் மற்றும் உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டனர்.
பிரணவ் கேஸ்ட்ரோ சென்டர் நிர்வாக இயக்குனர் துரை சசியானந்த் சில்வர் லைன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், சிங்கப்பூர் அரசு தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு கழக முனைவர் சந்தன்ராஜ் ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக மீன்வளத்துறை முன்னாள் செயலாளர் தண்டபாணி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கர் முரளி, பெரம்பலூர் முன்னாள் மருத்துவ இணை இயக்குனர் திலகவதி கணேசபாபு, ஆல்ஃபா மைன்ஸ் வென்ச்சர்ஸ் நிர்வாக பங்குதாரர் இளமயிலன், திருச்சி மாநகராட்சி நகர பொறியாளர் (பொறுப்பு) சிவபாதம், தமிழ்நாடு புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார் தீவுகள் அகில இந்திய கட்டுநர் சங்க முன்னாள் தலைவர் ஐயப்பன், ஜோதி பைல் பவுண்டேஷன் தொழிலதிபர் ஜோதி மகாலிங்கம்,
மத்திய மண்டல சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000ன் மாவட்ட கவர்னர் மணி, தில்லைநகர் வியாபாரிகள் சங்கத் தலைவர் அழகப்பன், அகில இந்திய கட்டுநர் சங்க தேசிய காப்பாளர் திருசங்கு, தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் சங்க தலைவர் துரை நம்பி பாண்டியன், திருக்கருகாவூர் சோழன் பள்ளி தாளாளர் சிவ சண்முகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நூலாசிரியர் முனைவர் விக்ரம கர்ண பழுவேட்டரையர் ஏற்புரையாற்றினார். வரலாற்று ஆய்வாளர் எழுத்தாளர் இளவரசி விக்ரம் கர்ணன் நன்றி கூறினார்.