12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளியில் உள்ள 20 ஆயிரம் காலி பணியிடங்களில் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருப்பவர்களை பணியமர்த்த வேண்டும் -நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை. மேலும் இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் கூறுகையில்:- கடந்த ஆண்டு நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வில் தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரத்து 606 தேர்வர்கள் தேர்வு எழுதிய நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள 2768 காலி பணியிடங்கள் என்பது கடந்த 12 ஆண்டுகளாக பணிவாய்ப்பிற்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பெருத்த ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்போது வரை ஒரு காலியிடம் கூட 2013 முதல் நிரப்பப்படாமல் தகுதி தேர்வு மட்டும் நான்கு முறை டிஆர்பி தேர்வினை நடத்தி உள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நியமன தேர்வை நம்பி காத்திருந்து தற்போது 40 முதல் 50 வயதை கடந்த தங்களுக்கு 2768 காலிப்பணியிடங்கள் என்பது மிகவும் குறைவானது. எனவே 2024 ஆம் ஆண்டு நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு முழு காணிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். 2024 ஆம் ஆண்டு நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கிய பின்பே மறுதேர்வு நடத்த வேண்டும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த 19,260 காலி பணியிடங்களை டிஆர்பி தேர்வாணையம் மூலம் நியமிக்க வேண்டும்.

தொடக்கப்பள்ளியில் உள்ள 20ஆயிரம் காலிப் பணியிடங்களையும் நியமன தேர்வர்களை கொண்டு நிரப்ப வேண்டும். நிதி பற்றாக்குறை சூழல் இருப்பின் நிரந்தர பணி நியமன ஆணை வழங்கி தற்காலிக தொகுப்பு ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசு 12 ஆண்டு காலமாக பணி நியமனத்திற்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கி தங்களது கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பினர் சார்பில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து தங்களது கோரிக்கையை முன் வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்