திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் திவ்யநாதன் மற்றும் டிசிஎல் லீலாவதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு செந்தாரகை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, டிஎன்எஸ்டிசி தொழிலாளிகள் பொது நல அமைப்பு சங்கம், பாரத அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு செந்தாரகை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பாரதிதாசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜசேகர், செந்தில்குமார் மற்றும் சுபேர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக திருச்சி டிசிஎல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் ந.க.எண் 387 388 425 482 483/ 2019 உடனே குற்றவியல் நடவடிக்கை எடு, ஏடிஜேசிஎல் வசம் இருக்கும் ந.க.எண். ஆ1/1031/24-ஐ வழக்கு விசாரணை உடனே துவக்கு, திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் திவ்யநாதன் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதால் மாநில தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கு, தமிழகம் முழுவதும் உள்ள டிசிஎல் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்