7-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் பேரணி மற்றும் தர்ணா போராட்டம் இன்று நடைபெற்றது இந்த பேரணி ஆனது திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் தொடங்கி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது அதனைத் தொடர்ந்து அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வருவாய் துறை அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த தர்ணா போராட்டத்தை மாவட்ட தலைவர் முனைவர் பால்பாண்டி துவக்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தலைமை தாங்கிட மாவட்ட தலைவர் ஜம்புநாதன் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார். இந்த தர்ணா போராட்டத்தின் கோரிக்கைகளாக:-

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் நில அளவைத் துறையில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உரிய பணி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்கள் தாக்கப்படும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும், பொது மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் விரைந்து நிரப்பப்பட வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு குறிப்பாக களப்பணியாளர்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் போதிய கால அவகாசம் இன்றி இலக்குகள் நிர்ணயிக்கப்படுவதை தடுத்து இதற்கான விரைவான தீர்வை வழங்க வேண்டும்.

பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கான கருணை அடிப்படை பணி நியமன உச்ச வரம்பை ஐந்து சதவீதத்திலிருந்து மீண்டும் 25 சதவீதமாக உயர்த்தி கிராம உதவியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி தகுதிக்கேற்ப உரிய பணியிடங்களை வழங்க வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதி வருவாய்த்துறை தினமாக அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்