இந்தியாவிலேயே முதல் முறையாக ஓய்வு ஊதியம் பெறும் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களைக்கு பேட்டியளித்த ஓய்வுதியம் கணக்கு கட்டுபாட்டு அதிகாரி ஜெயசீலன் கூறுகையில்:- திருச்சி மன்னார்புரம் ராணுவ பயிற்சி மைதானத்தில் வரும் ஜூன் 30, தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்காக இந்தியாவில் முதல்முறையாக சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட கணினிகள், 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியில் ஈடுபட உள்ளனர்.

ஒன் ராங்க் ஒன் பென்ஷன், குடும்ப பென்ஷன், வாரிசு பெயர் திருத்தம், இரட்டை பென்ஷன் (2012க்குப் பிறகு), உள்ளிட்ட அனைத்து ஓய்வூதிய பிரச்சனைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு வழங்கப்படுகிறது. 10, 15 ஆண்டுகளாக பென்ஷன் பெறாதவர்களும் நேரில் வந்து தீர்வு பெறலாம். சுமார் 5000–6000 பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள ஓய்வுதியர்களுக்கான தீர்வின் அடிப்படையில் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் முகாமில் வழங்கப்படவுள்ளன. இம்முகாமில் பங்கேற்பதற்காக ஓய்வூதிய ஆவணங்கள், ஆதார் அட்டை மற்றும் வங்கி விவரங்களை கொண்டு வர வேண்டும். முகாமுக்கு வர இயலதவர்களுக்காக, தமிழகம் முழுவதும் 5 நடமாடும் குறைதீர்ப்பு வாகனங்கள் மாவட்டங்களுக்கு சென்று குறைதீர்க்கும் வகையில் திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் இத்தகைய பரந்த அளவிலான முகாம் நடைபெறுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்