அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு போக்குவரத்துகழக தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மண்டல தலைவர் சேகர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிராஜுதீன் துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். மண்டல துணைப் பொதுச் செயலாளர்கள் ராஜேந்திரன் மற்றும் பூபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:- 01-07-2023 முதல் இதுவரையிலும் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய பிஎஃப் பணிக்கொடை முதலான பணி ஓய்வு பண பலன்களை உடனே வழங்க கோரியும், குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படி வழங்க கோரியும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 அமல் படுத்திட கோரியும், நீதிமன்ற தீர்ப்பின் படி ஓய்வூதியர்களுக்கு முழுமையான அகவிலைப்படி உயர்வை வழங்க கோரியும், வாரிசு வேலை வழங்கக்கோரியும் மற்றும் பிற துறைகளைப் போன்று மருத்துவ காப்பீடு வழங்க கோருவது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்