ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் மாவட்டம் 9127 இணைந்து பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளையின் மூலம் ரோட்டேரியன் மருத்துவர் சீனிவாசன் நேரடி பங்களிப்பில் சுமார் அமெரிக்க டாலர் 53435 (இந்திய மதிப்பின்படி 4500000) மதிப்பீட்டில் ஜோசப் கண் மருத்துவமனையில் கண் வங்கி அமைப்பதற்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவுக்கு டி.இ.எல்.சி. பிஷப் கிறஸ்டியன் சாம்ராஜ் ஆசீர்வாதத்துடன் பன்னாட்டு ரோட்டேரியன் இயக்குனர் ரோட்டேரியன் முருகானந்தம் திறந்து வைத்து ஜோசப் கண் மருத்துவமனைக்கு இந்த திட்டத்தை ஒப்படைத்தார்.

மேலும் கண் வங்கிக்கு தேவையான கண் அமைக்கப்பட்டு, திருச்சியில் மேலும் வேறு எந்த மருத்துமனையிலும் இல்லாத அதிநவீன குளிர்சாதனங்கள் இயந்திரம் மற்றும் உபகரணங்கள் கண் வங்கிக்கு வழங்கினர். கண் உலகத்தின் திறவுகோல், கண்தானம் வாழ்நாளில் நாம் செய்யக்கூடிய சிறந்த தானம். இப்படிப்பட்ட மகத்தான தானத்தை செய்தும், சில நேரங்களில் தொழில் நுட்பமில்லாத காரணத்தால் சிறந்த முறையில் சிகிச்சை செய்ய முடியாமல் போகிறது. இதை தடுக்க திருச்சி மாவட்டத்திலேயே முதல்முறையாய 45 லட்சம் செலவில் இதனை திறந்து வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வின்போது சீனிவாசன், மாவட்ட ஆளுநர் கார்த்திக், சுப்ரமணியன, ரோட்டேரியன் A.லியோ பெலிக்ஸ் லூய்ஸ், ராஜா கோவிந்தசாமி மற்றும் ரோட்டேரியன் கண்ணன் மற்றும் ஜோசப் கண் மருத்துவனையின் இயக்குனர் ரோட்டேரியன் மருத்துவர் பிரதிபா திருச்சபையின் செயலாளர், தங்கபழம் மற்றும் திருச்சபையின் பொருளாளர். ஞானப்பிரகாசம் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி நிர்வாகிகள் முகமதுதாஜ், லிஸி.அசோமுக, சத்யநாராயணன், ஹனிபா சானவாஸ் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபாபிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்