திருச்சி 62 ஆவது வார்டு எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் 80 சென்ட் இடத்தை ஒரு தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்தும் உடனடியாக இந்த இடத்தை மீட்டு தரக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பலமுறை இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்க கோரி இந்து முன்னணி சார்பில் இந்து முன்னணி பொன்மலை மண்டல செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சிறுவனுக்கு விநாயகர் வேடம் அணிந்து நூதன முறையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைவர் சரவணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *