இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ..சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் எதிரில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவை தலைவர் சாகுல் ஹமீது, மில்டன் குமார், துணை செயலாளர்கள் பிரீத்தா விஜய் ஆனந்த், முத்துகுமார், விஜய் சுரேஷ், காளியப்பன் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலைப்புலி பாண்டியன், ராமு , லோகராஜ், ஐயப்பன், பெருமாள், ஜங்ஷன் பகுதி செயலாளர் வெங்கடேஷ், பொன்மலை பகுதி செயலாளர் அருள்ராஜ், உறையூர் பகுதி செயலாளர் மோகன், அரியமங்கலம் பகுதி செயலாளர் அலெக்ஸ், மகளிர் அணி செயலாளர் சுசிலா, நிஷா நிர்வாகிகள் செல்லத்துரை, செல்வராஜ், மாஸ் விஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.