இந்தியாவில் வாக்குத் திருட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பணிகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருச்சி கலை, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருஉருவ சிலைக்கு முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து அருணாச்சலம் மன்றத்தின் வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். பிறகு திருச்சி அருணாச்சலம் மன்றத்தின் வெளியே பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் வாங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ரெக்ஸ், திருச்சி கலை, வழக்கறிஞர் கோவிந்தராஜ், பென்னட், மாநகராட்சி கவுன்சிலர் சோபியா விமலா ராணி, பொருளாளர் முரளி, ஐ.டி. பிரிவு லோகேஷ், அரிசி கடை டேவிட், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், கோட்டத் தலைவர்கள் பிரியங்கா பட்டேல், வெங்கடேஷ் காந்தி, அழகர், மலர் வெங்கடேசன், பாக்கியராஜ், பகதூர்ஷா,
மாவட்டச் செயலாளர்கள் பூக்கடை பன்னீர்செல்வம், உறந்தை செல்வம், மனித உரிமை துறை ஆறுமுகம், ராகவேந்திரா, மகளிர் அணி ஷீலா செலஸ், அஞ்சு, அமைப்புசாரா அணி மகேந்திரன், ஆராய்ச்சி பிரிவு தலைவர் பாண்டியன், கலைப்பிரிவு அருள், பத்மநாபன், மாரீஸ்வரி, கிளமெண்ட், வார்டு தலைவர் விஜயலட்சுமி மற்றும் வடக்கு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.