ஆதி திராவிடர் மற்றும் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். அதனை தொடர்ந்து திருச்சி கலையரங்கத்தில்நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு 16 துறைகளின் சார்பில் 2,058 பயனாளிகளுக்கு ரூபாய்.37. 75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார். நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன், எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, கதிரவன், சௌந்திர பாண்டியன் மற்றும்திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி,மண்டல குழு தலைவர் துர்கா தேவி கவுன்சிலர் கலைச்செல்வி, பகுதி செயலாளர் மோகன் தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்