திருச்சி மலைக்கோட்டை சருக்கு பாறை பகுதியில் வாகனம் நிறுத்துமிடம் திறப்பு மற்றும் அருள்மிகு மலைக்கோட்டை, திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயில் ரூ.57.80 இலட்சம் மதிப்பீட்டில் அம்மன் புதிய மரத்தேர் செய்வதற்கான திருப்பணி துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து. தெப்பக்குளம் பகுதியில் நடந்த விழாவில் துணை சுகாதார நிலையத்தை திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யா மொழி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவரும், மாநகர திமுக செயலாளருமான மதிவாணன் மற்றும் கவுன்சிலர் மணிமேகலை திமுக நிர்வாகிகள் அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் அறங்காவலர்கள் பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
