வருகிற மார்ச் 11ஆம் தேதி பாரதப் பிரதமர் மோடி பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சி வருகைதரவுள்ளார், அதை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிடுவதற்காக இன்று மாலை திருச்சி விமான நிலைய வந்த மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது…. மார்ச் 11ம் தேதி மாலை 4 மணி அளவில் பிரதமர் மோடி திருச்சி வர உள்ளார், தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். நாம் எங்குமே ஹிந்தியை திரிப்பது கிடையாது தேர்தல் வந்தால் மட்டுமே இவர்களுக்கு இதுபோல் பேச்சுக்கள் கண்களுக்கு தெரிகிறது. மோடி ஆட்சிக்கு வந்தபின் தான் யுபிஎஸ்சி, சிஆர்பிஎப் போன்ற தேர்வுகள் தமிழ் மொழியில் வைக்கப்படுகின்றன.

திமுக இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழுக்காக என்ன செய்தது, தமிழ் மொழி வளர்ச்சிக்காக உருப்படியான ஏதாவது ஒரு திட்டத்தை திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறதா. திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழை தவிர வேறு மொழிகளை தான் கற்று தருகிறார்கள். இவர்கள் மக்களை மொழி இனம் வைத்து பாகுபாடு காட்டுகின்றனர் இதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் தேர்தலுக்கான அரசியல் செய்பவர்கள் அல்ல, பிரதமர் மோடி கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கிட்டத்தட்ட 13 லட்சம் கோடி ரூபாய் அளித்துள்ளார். விமான நிலையம், எக்ஸ்பிரஸ் ஹைவே, மேலும் தமிழகத்திற்கு அதிக அளவிலான ரயில்வே திட்டங்கள் கொடுத்துள்ளோம். என்டிஏ கூட்டணி திமுகவை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளது, தேர்தல் என்று நடக்கிறதோ அன்றைக்கு திமுக அரசாங்கம் வீட்டிற்கு போகும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். பொதுக் கூட்டங்களில் மக்கள் கூடுகின்ற இடங்களில் தொண்டர்கள் சுய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும், மக்களை கட்டுப்படுத்துவது, தொண்டர்களை ஒழுக்கமாக இருக்க வைப்பது அந்தந்த கட்சிக்கு இருக்கும் பொறுப்பு, அவர்கள் கட்டுப்படுத்தவேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை இன்னும் தேர்தலுக்கு 45 முதல் 50 நாட்கள் உள்ள நிலையில் , தேர்தல் என்று நடக்கிறதோ அன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். யாரோ வருகிறார்கள் என்னவோ பேசுகிறார்கள் என்பது நிலையல்ல, மக்களுக்கு யார் நல்லாட்சியை கொடுக்க முடியும், டபுள் எஞ்சின் சர்க்கார் யார் எங்களால் தான் கொடுக்க முடியும் உ.பி, ம.பி, ஹரியானா, பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் வளர்ச்சி வேகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்திலும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் மக்கள் எவ்வளவு செழிப்பாக இருந்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நல்ல அரசை தருவார்கள் என்பதை மக்கள் விரும்புகின்றார்கள். திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என என்னால் ஆருடம் கூற முடியாது நான் ஜோதிடர் கிடையாது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய மனக்கசப்பு இருந்து கொண்டுள்ளது, நெருடல் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்